பப்பாளி பல நோய்களைத் தடுக்கும் இது பல நோய்களுக்கு மருந்தாகவும், அழகு சாதனப் பொருட்களிலும் பயன்படுகிறது.
வைட்டமின் ஏ மற்றும் சி மிகவும் அதிகமாக உள்ளது. இதில் வைட்டமின் ஈ, வைட்டமின் கே, கால்சியம் கெரடினாய்டுகள், நார்ச்சத்து போன்றவையும் நிறைந்துள்ளது.
நார்ச்சத்து நிறைந்த நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற பழம். சிறிய அளவுகளை எடுத்துக் கொள்ளவும். ஒரு துண்டு போதுமானது.
கண்களுக்கு மிகவும் நல்லது இதில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. கண் அரிப்பு, கண் எரிச்சல், கண் வறட்சி, குழந்தைப் பருவ பார்வைக் குறைபாடு ஆகியவற்றைத் தடுக்கிறது.
பப்பாளி நல்ல ஜீரண சக்தியை கொடுக்கிறது. பப்பாளியை விதைகளுடன் எடுத்துக்கொள்வது சிறந்தது.
பழுத்த பாதி பழத்தை சாப்பிட்டால் மாதவிடாய் பிரச்சனைகள் குணமாகும். குறிப்பாக ரத்தப்போக்கு குறைவாக உள்ளவர்கள் சாப்பிட வேண்டும்.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த பப்பாளி பழத்தை தினசரி உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
கர்ப்பிணிகள் 5 மாதங்களுக்குப் பிறகு சிறிய அளவை எடுத்துக்கொள்ளலாம். இதை பல சாலட்களுடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.
பப்பாளிப் பழத்தை நம் தோலில் ஒரு வாரம் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவினால் முகம் பொலிவு பெறும். அழகு கூடும். முகத்திற்கு பொலிவைத் தரும்.
வைட்டமின் சி நிறைந்திருப்பதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, இரத்த வெள்ளை அணுக்களை அதிகரிக்கிறது.